ஜன.12ம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு – TNPSC அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பல நாட்களாக காத்திருந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு முடிவுகள்:
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் பல மாதங்களை கடந்த நிலையிலும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் TNPSC தேர்வு வாரியம் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளின் உத்தேச பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனால் நடந்து முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன.6 ( சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் – அரசு அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 5777 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், 95 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு வாரியத்தின் அறிவிப்பின் காரணமாக தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.