போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் ஆலோசனைக்கு வர வேண்டும் என போக்குவரத்து துறை வலியுறுத்தி உள்ளது.
போக்குவரத்து துறை
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் ஊதிய உயர்வு (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), காலியாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புதல், எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை இருக்கின்றன.
ஜன.12ம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு – TNPSC அறிவிப்பு!
இந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வருகிற 9 ஆம் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். அதனால், சென்னை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தி இருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும், அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்புகளை தவிர்த்து பணிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.