தமிழகத்தில் ஜன.6 ( சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.6 ( சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.6 ( சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.6 ( சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ஜனவரி 6ஆம் தேதி அன்று பள்ளிகள் செயல்படுவது குறித்து முக்கிய தகவல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறைகள் விடப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறந்து செயல்பட தொடங்கியுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் பட்சத்தில் மட்டுமே சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!

அந்த வகையில் வரும் ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி அரசு, அரசு நிதி உதவி பெறும், மாநகராட்சி, மெட்ரிக் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6ஆம் தேதி முழு வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!