இந்த பாட நூல்களை படித்தாலே போதும் … TNPSC தேர்வில் நீங்கள் தான் முதலிடம்…!
TNPSC தேர்வுக்கு ஆண்டுதோறும் விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு காரணம் அனைவரும் அரசு வேலை வாங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் படிப்பதே.
TNPSC தேர்வு:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்களை படித்தாலே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற முடியும். அது மட்டுமே அல்லாமல், பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் போன்ற பல்துறை சார்ந்த பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்திய அரசின் வெளியீட்டுத்துறை வெளியிட்டுள்ள இந்தியா இயர் புத்தகம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் என்பதால் தேர்வர்கள் அதை முழுவதுமாக படிக்க வேண்டும். மேலும் நடப்புச்செய்திகளை அறிந்து கொள்ள நாள்தோறும் செய்தித்தாளை வாசித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் போட்டியாளர்கள் மேற்கண்ட பாட நூல்களை திரும்ப திரும்ப படித்து அதிலிருந்து பல்வேறு மாதிரித்தேர்வுகள் எழுதிப்பார்ப்பதன் மூலம் வெற்றியும் வேலையும் நிச்சயம் கிடைக்கும்.