குரூப் 1 தேர்வுக்கான புதிய நடைமுறைகள் – TNPSC தலைவர் அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா.பாலச்சந்திரன் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குரூப் 1 தேர்வுக்கான நடைமுறைகள்:
டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வுகள் வருகிற ஜனவரி மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே 2,56,000 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தது. இதனை சரி செய்யும் பொருட்டு இந்த வருடம் தேர்வுக்கான நடைமுறைகளில் மாற்றம் செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Download TNPSC Group 1 Hall Ticket
இதுகுறித்து நேற்று நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, பெத்லஹோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இந்த வருடம் குரூப் 1 தேர்வுகளை எழுத 2,56,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,80,000 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முதலில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆதார் எண்ணைகளை பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருள்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
அதே போல் தற்போது தேர்வுகளில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்க எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதோ அதனை குறிக்க வேண்டும். தேர்வு கண்காணிப்பாளர் அதனை சரிபார்த்து பின் சான்றிதழ் வழங்க வேண்டும். பின்னர் 2 பகுதி ஓஎம்ஆர் தாள்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒரு தாளில் தேர்வர்களின் முழு விவரம் இருக்கும் மற்றொரு தாளில் தேர்வு எழுதிய தேர்வரின் விவரங்கள் பார்கோடில் இருக்கும். இதனால் தேர்வு முடிவடைந்ததும் பார்கோடு தாள் இரண்டாக பிரிக்கப்பட்டு அந்த பகுதி மட்டுமே ஸ்கேன் செய்யப்படும் இதனால் தேர்வரின் விவரங்கள் வெளியே தெரியாமல் இருக்கும். இவ்வாறு புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்வு எழுத வருபவர்கள் கட்டாயம் அரசு விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |