TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பில் முக்கிய மாற்றம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிகளுக்கான 263 காலி இடங்களை 25 நவம்பர் 2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 24ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான தேர்வுகள் பிப்ரவரி 7 , 2024 ஆம் தேதி அன்று காலை மற்றும் பிற்பகலில் இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் நடக்க உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூபாய் 20,600 முதல் ரூபாய் 75,900 வரை சம்பளம் பெறுவார்கள்.
TNPSC குரூப் 4 Online Classes!!!!
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி முன்னதாக தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தற்போது தாள்- இரண்டு, பகுதி -B க்கான பாடத்திட்டங்களை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாற்றப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.