தஞ்சாவூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு பசுபதீஸ்வரசுவாமி திருக்கோயில் பந்தநல்லூர், திருவிடைமருதூர் வட்டத்தில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை |
பணியின் பெயர் | ஓதுவார் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
அருள்மிகு பசுபதீஸ்வரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
TCS நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஓதுவார் கல்வி தகுதி:
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு, பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை 20.04.2023 முதல் 18.05.2023 அன்று மாலை 05.00 மணி வரை திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 19.05.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்.