
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கமான செயல்முறையாக இருக்கிறது. அந்த வகையில் சில மாவட்டங்களின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
இவ்வாறு வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் அதாவது பிப்ரவரி 8 மற்றும் 9-ம் தேதிக்கான மின்தடை குறித்த எந்த விவரங்களையும் மின்வாரியம் குறிப்பிடப்படவில்லை. இதனால் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

























