தமிழகத்தை வாட்டி வதைக்கும் கோடை வெயில் – வெப்பநிலை 105.8 ஆக பதிவு.. பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 100 – ஐ தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்கவே அச்சப்படுகின்றனர்.
வெப்பநிலை:
இந்தியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் குளிரின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் காலை நேரங்களில் கொட்டி தீர்த்த பணியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர். இந்த கடும் பணியால் உயிரிழப்புகளும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் UPI பண பரிமாற்ற செயல்முறை – வெளியான ஆய்வறிக்கை தகவல்! என்ன இவ்வளவா?
குளிரைப் போலவே இந்த ஆண்டு கோடைகால வெயிலும் அதிகரித்துள்ளது. அண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் வரும் நாட்களின் வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எச்சரித்தது. அதன்படி தற்போது தமிழகத்தில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 105 .8 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது. அதே போல ஈரோடு மாவட்டத்தில் 105.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதே போல தருமபுரி, வேலூர், மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை சதம் அடித்துள்ளது.