வங்கக்கடலில்‌ உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை தகவல்!

0
வங்கக்கடலில்‌ உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை தகவல்!
வங்கக்கடலில்‌ உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை தகவல்!
வங்கக்கடலில்‌ உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை தகவல்!

தெற்கு வங்கக்கடலில்‌ நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தென்மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து டிச. 24 தேதி தமிழகம் புதுவையின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Follow our Instagram for more Latest Updates

அடுத்ததாக டிச. 25ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌.

தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்? – உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி!

Exams Daily Mobile App Download

வரும் டிச. 25ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல்‌, இலங்கை கடலோரப்பகுதிகள்‌, தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!