தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்? – உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற சட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ் கட்டாய பாடம்:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது முதல் தாய் மொழியான தமிழ் மொழியின் ஆளுமை குறைந்து ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக குழந்தைகள் தமிழை எழுதுவதற்கும், படிப்பதற்கும் மட்டுமல்லாமல் பேசுவதற்கும் கூட சிரமப்பட்டனர். இது போன்ற நிலை நீடித்தால் தமிழ் மொழி வரும் தலைமுறையினரை சென்று அடைவதில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக, தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக மாற்ற சட்டம் அமலுக்கு கொண்டு வந்தது. ஆனால் தற்போது இவை முறையாக கடைபிடிக்கப்படுகிறா? என்று ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.