மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
தமிழகத்தில் மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தடை செய்யக்கோரி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
மின்சார மானியம்:
தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்குகிறது. இந்த மானியத்தை பெறும் பயனாளர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் இப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிவரை முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதற்கிடையில், மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில், ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தடை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை எனவும் தீர்பளித்துள்ளனர்.