கர்ப்பிணி பெண்களின் நலனிற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசு – ரூ. 50 கோடி செலவில் செயல்பாடுகள்!
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊட்டச்சத்து குறைபாடு உடைய கர்ப்பிணிகளின் நலனிற்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ரூ.50 கோடி நிதி செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு சத்து மாத்திரைகள் போன்ற பலவற்றையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசு இது தொடர்பாக ஒரு புதிய திட்டத்தை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை போன்றவற்றால் தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதிக்கப்படுவதால் பலவிதமான சிக்கல்கள் எழுகின்றது. இதனால், மாநிலத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 83% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு கே.சி.ஆர் ஊட்டச்சத்து கிட் திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக மக்களே.. மனச திடப்படுத்திக்கோங்க – இந்த வருஷம் பொங்கல் பரிசில் இது இல்லை!
Exams Daily Mobile App Download
முதற்கட்டமாக தெலுங்கானாவின் 9 மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மற்ற மாநிலங்களில் அடுத்தகட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. கே.சி.ஆர் ஊட்டச்சத்து கிட் திட்டத்திற்காக ரூ.50 கோடி நிதி செலவிடப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.