தமிழக மக்களே.. மனச திடப்படுத்திக்கோங்க – இந்த வருஷம் பொங்கல் பரிசில் இது இல்லை!
தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப் பரிசு தொகை வழங்க உள்ளதாக பரவலாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த முறை ஆவின் நெய் வழங்கப்பட்டது போன்று இந்த முறை வழங்குவதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொருட்கள் தரமற்றதாகவும் மற்றும் எடை குறைவானதாகவும் இருந்தது என புகார்கள் பெறப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் இந்த முறை ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ரொக்க பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதே போல் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளும் நடைபெறுகிறது.
பெண்கள் பல்கலையில் படிக்க இனி அனுமதி இல்லை..அத்துமீறும் அநீதிகள் – ஆட்டிபடைக்கும் தலிபான்கள்!
Exams Daily Mobile App Download
கடந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 ml ஆவின் நெய் வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை பரிசுத் தொகுப்பிலும் ஆவின் நெய் இடம்பெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் கூறியிருப்பதாவது, பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக நெய் தயாரித்து வழங்குவது குறித்து எந்தவொரு தகவலும் தமிழக அரசிடமிருந்து தங்கள் நிறுவனத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளது. அதன்படி இந்த முறை பரிசு தொகுப்பில் நெய் இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.