தமிழக ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தகுதி தேர்வு மற்றும் நியமனத்தேர்வு குறித்த முக்கிய விவரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
நியமனத்தேர்வு:
தமிழகத்தில் அனைத்து விதமான அரசு பணிகளும் தகுந்த தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் நியமனம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் தனிப்பட்ட தேர்வு செயல் முறையை அரசு கையாண்டு வருகிறது. அந்த வகையில், 2012ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணியை பெற தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், இரண்டு தாள்களுக்கும் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்.
IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ஆனால், கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அரசு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும், தனியாக, இரண்டாம் கட்டமாக நியமன தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இந்த அறிவிப்பு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை பெற்றது. இந்நிலையில், தற்போது, நியமன தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்து வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து உயர் கல்வித்துறை பொன்முடி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசாணை 149 ன் படி நியமனத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், விரைவில் ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download