தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பதவி உயர்வு:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு அரசாணை 243 – இன் படி இனி மாநில சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் ஆசிரியர் பதவி உயர்விற்காக ஒரு லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாய்ப்பை அரசு தட்டிப் பறிக்க கூடாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசின் இந்த புதிய உத்தரவால் பணியிட மாறுதல் பெற்று சொந்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் செக் வைத்து பேரம் பேசுவார்கள். இது போன்ற அநீதிகள் அரங்கேறும். இதற்கு அரசு இடம் அளிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.