12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Assistant Cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தமிழக மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் (TN SWD) கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Cum Data Entry Operator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு + கணினி பயிற்சிக்கான சான்றிதழ் அல்லது 12ம் வகுப்பு + Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.13,240/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.