தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
போதிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்பதால், மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு இத்தொற்று உறுதியாகி இருக்கிறது.
TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக வகுப்புகள் நடைபெறும் முறைகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ்,
- பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
- இம் மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம்.
- மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் போது கட்டாயமாக வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- இதில் அதிக வெப்பநிலை இருக்கும் நபர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
- எப்போதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
- சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வகுப்பறைகளின் தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கிருமிகளை நீக்கம் செய்ய வேண்டும்.
- கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க இறை வணக்கம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
- பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக மூட வேண்டும்.
- குறிப்பாக நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது.
- அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.