ஜனவரியில் பள்ளிகளை திறக்க திட்டம் !! – தமிழக அரசிற்கு அழுத்தம் ??

0
ஜனவரியில் பள்ளிகளை திறக்க திட்டம் !! - தமிழக அரசிற்கு அழுத்தம்
ஜனவரியில் பள்ளிகளை திறக்க திட்டம் !! - தமிழக அரசிற்கு அழுத்தம்

ஜனவரியில் பள்ளிகளை திறக்க திட்டம் !! – தமிழக அரசிற்கு அழுத்தம் ??

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என அனைத்து கல்வி வாரிய சங்கங்களிடம் இருந்தும் தமிழக அரசிற்கு அழுத்தம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் வரும் ஜனவரியில் பள்ளிகளை திறக்க உள்ளதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு ?!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் 10 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர். மேலும் பள்ளிகளை திறக்க ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்ற போதும் பெற்றோர்களின் எதிர்பால் அவை கைவிடப்பட்டது. தற்போது தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் சார்பில் பள்ளிகள் திறக்க ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • கொரோனா தொற்று பரவியதால், 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை; மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை.
  • உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில், பலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை.
  • மெட்ரிக் பள்ளிகளில், 80 சதவீதம் பேர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் கிராமங்களில் தினக்கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
  • ஏழை, கிராமப்புற மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க சிரமப்படுகின்றனர்.
  • கல்வி கட்டமைப்பு சீரழிந்து விட்டால், நாடும் சீரழிந்து விடும். இதனால் பள்ளிகளை திறக்க வேண்டும்.
  • பல மாநிலங்களில், பல நாடுகளில், பள்ளிகள் திறந்து கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.
  • அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, முக கவசம் அணிந்தவாறு, பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தனியார் பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள், புத்தகம் வாங்காமல் உள்ளதால், அரசின் சார்பில் இலவச புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளாதால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்” என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ?!

அரசிற்கு இவ்வாறாக அழுத்தம் ஏற்பட்டு வந்தாலும் தற்போது வானிலை மற்றும் புயல் முன்னெச்செரிக்கை காரணங்களினால் ஒட்டுமொத்தமாக பொங்கல் விடுமுறைக்கு பின்னர் ஜனவரியில் பள்ளிகளை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!