பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை !!! – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் பள்ளிகள் யாவும் மூடப்பட்டிருந்தது. இதனால் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இதனால் அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியானது.
அடுத்த கல்வியாண்டினை தொடங்குவது பற்றி பல்வேறு கருத்துகள் எழுந்தாலும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் மாணவர் சேர்க்கை வெளியானது. அதில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு சேர்க்கை ஆனது 17 மற்றும் 24 ஆகிய தேதிகள் முதல் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு செய்திக்குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர் சேர்க்கை மட்டுமே நடத்த சாயலும் என்றும் பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறு இல்லை என்றும் அறிவித்து உள்ளார்.
மாணவர் சேர்க்கை ஆனது ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |