தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – தாமதமானால் இது தான் காரணம்!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதனால் 10-12ம் வகுப்புகளுக்கு அதற்கு முன்னரே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீதமிருந்த வகுப்புகளுக்கு தேர்தலுக்கு முன் பின் என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு ஏப்ரல் இறுதியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது ஒரு மாத காலமாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்று கேள்விகள் எழுந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தான் பள்ளிகளை திறப்பர். ஆனால், இம்முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை இருக்கிறது. மேலும் மே 25க்கு பிறகு சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.55,000/-
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்த்தால் பள்ளிகள் ஜூன் 10ம் தேதிகள் திறக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.