ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்து உள்ளார். அது குறித்து விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்
ஆன்லைன் வகுப்புகள் :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு
மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஆனது ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தொலைக்காட்சிகளை விட அந்தந்த பள்ளிகளின் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் தான் பிரதான ஆயுதமாக இருந்து வந்தது.
5 நாட்கள் நிறுத்தம் :
பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் தற்போது தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை எனவும், 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை பிளாக்லெவல் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்