ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு

0
5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு
5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்து உள்ளார். அது குறித்து விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்

ஆன்லைன் வகுப்புகள் :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு

மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஆனது ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தொலைக்காட்சிகளை விட அந்தந்த பள்ளிகளின் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் தான் பிரதான ஆயுதமாக இருந்து வந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

5 நாட்கள் நிறுத்தம் :

பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் தற்போது தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை எனவும், 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை பிளாக்லெவல் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!