பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு

0
பள்ளிகள் திறப்பு எப்போது – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு
பள்ளிகள் திறப்பு எப்போது – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு

பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே இந்த கல்வி ஆண்டு செல்கின்ற நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஒருத்தி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு :

அதாவது நாடு முழுவதும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தின் பேரில் வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் அறிவிப்பு

மத்திய அரசின் அறிவிப்பின் படி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆந்திர மாநிலத்தில் வரும் செப் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
  • வகுப்பு அறைகளில் மாணவர்களிடையே 6 அடி தூரத்தை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
  • ஊழியர்கள் அறைகள், அலுவலக பகுதி, கேன்டீன், நூலகங்கள் மற்றும் பிற இடங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
  • மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், சானிடைசர்கள், அடிக்கடி கை கழுவுதல் போன்றவையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!