மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அழைக்க கூடாது – கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் எந்த காரணத்தை கொண்டும் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி அழைக்க கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் வேகமெடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 6,986 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் மத்தியிலும் திட்டமிட்டபடி +2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு மேல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களை எவ்வித காரணமும் கூறி பள்ளிகளுக்கு அழைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இடைநிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரித்தேர்வு வினாக்கள் வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு – மாணவர்கள் அதிர்ச்சி!!
இதனால் மாணவர்கள் நேற்று (13-0-2021) பள்ளிகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், ‘மாணவர்களை எந்தவொரு காரணம் கூறியும் பள்ளிக்கு அழைக்க முயற்சிக்கக்கூடாது. ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கூறி மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளார்.