தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!
தமிழகத்தில் வரும் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முன்னேற்பாடு பணிகள்:
தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதி வரை வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தது. அதன்பிறகு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும், ஜூன் 5ம் தேதி முதல் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“No Bag Day” – பள்ளிக்கு பேக் தேவையில்லை – அரசின் திட்டத்தால் மகிழ்ச்சியில் மாணவர்கள்!
அதன்படி, 6 to 12ம் வகுப்புகள் ஜூன் 12ம் தேதியும், 1 to 5 ம் வகுப்புகள் ஜூன் 14ம் தேதியும் வகுப்புகள் தொடக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணிகள், மின் இணைப்பு சரி பார்ப்பு, கட்டடங்கள் சீரமைப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.