10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் !
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.
இதன்படி தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது ஜூன் மாதம் நடத்தப்பட்ட இருக்கிறது. ஆனால் அந்த தேர்வினை தள்ளிவைக்க பெற்றோர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கினை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமனஞ் தள்ளுபடி செய்துள்ளது.
இதிலிருந்து தேர்வானது கட்டாயம் நடத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வானது வரும் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்பட இருக்கிறது. மாணவர்களும் தேர்விற்கு தாயாகி கொண்டுள்ளார். அரசு கல்வி துறையும் தேர்வு நடத்துவதற்குரிய ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பெறோர்களிடம் கருது கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |