8 ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.
இதன் ஒரு அங்கமாக வரும் ஜூன் 8 ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வரும் ஜூன் 15 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் முன்னதாகவே ஆசிரியர்கள் வந்து சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தேர்விற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவும் அதில் அங்கமாக செயல்படுத்தப்படுகிறது.
மேலும் ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும், மேற்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தகவ்களை மேலும் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |