தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகம் – பள்ளிக்கல்வித்துறையில் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முடிவடையவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை வரவிருக்கும் 2023-2024ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை தயார் செய்யும் பணியை தொடங்கி விட்டது. இதனையடுத்து எவ்வளவு பாட புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்பது குறித்த விவரத்தை சேகரித்து வருகிறது.
பாடப்புத்தகங்கள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் உரிய காலத்தில் துவக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் வழக்கம் போல நடைபெற்று வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
மற்ற தேர்வுகளை தொடர்ந்து 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 2023 – 2024ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு எவ்வளவு பாட புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்பது குறித்த விவரத்தை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலைநாடுநர்கள் கவனத்திற்கு.. நவ. 25ம் தேதி தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
Exams Daily Mobile App Download
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் புத்தகம் வழங்க வேண்டும் என்பதால் இப்பணியை விரைந்து முடிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.