தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் – அரசு உத்தரவு
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிற்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!
பரிட்சையின்றி பாஸ்:
இந்தியாவில் ஏற்கனவே குஜராத் மற்றும் புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். சுயஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றினாலே நோய்பரவலில் இருந்து 89% தப்பிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |