தமிழக மக்கள் கவனத்திற்கு.. ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!!
தமிழகத்தில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறையில் இருக்கும். மக்களுக்கு உணவுப்பண்டங்களை விநியோகிக்கும் நியாயவிலைக் கடைகள் முதற்கொண்டு அனைத்தும் செயல்படாது. ஏதேனும் சில அவசரக் காலங்களில் மட்டுமே இந்த விதிக்கு தளர்வு வழங்குவர்.
அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நாளை (மே 26) ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே மாதம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு பொது விநியோக பொருட்களை இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் அதனை வழங்க வேண்டும் என்பதால் விடுமுறை நாளான நாளையும் ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு ஈடாக மற்றொரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். அந்த தேதி பின்னர் குறிப்பிடபப்டும் என்றும் ஆணையர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Join Our WhatsApp Channel ” for the Latest Updates
TNPSC குரூப் 2/ 2A தேர்வு பாடங்கள் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!