தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – தனியார் பள்ளிகள் முடிவு!!
தமிழக அரசின் அறிவிப்பு:
நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மிகவும் தாமதமாக ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்தது முதல் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் பணிகளில் பள்ளிகள் ஈடுபட தொடங்கின. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் மே 3ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
பொதுத்தேர்வு ரத்து:
9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை பற்றிய அறிவிப்புகளை அரசு வெளியிடாமல் இருந்தது. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் சட்டசபையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார். இதனால் பல தனியார் பள்ளிகள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
தனியார் பள்ளிகள்:
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தா விட்டால் மாணவர்களை 11ம் வகுப்பில் எந்த மதிப்பெண்களின் அடைப்படையில் சேர்க்க முடியும் என்ற குழப்பம் நிலவியது. இதனை தவிர்ப்பதற்காக தனியார் பள்ளிகள் மண்டல வாரியாக தங்களது மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளது.
சிபிஎஸ்சி பள்ளிகள் இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!!
தேர்வுக்கான வினாத்தாளை தயாரிக்கும் பணியில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றது. தேர்வு கட்டணமாக மாணவர்களிடம் ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது. மேலும், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் இதன் மூலம் கட்டணத்தை வசூலிக்கும் நோக்கமும் உள்ளது என்று அறியப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்