கொளுத்தும் கோடை வெப்பத்தில் மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் – அரசுக்கு கோரிக்கை!

0
கொளுத்தும் கோடை வெப்பத்தில் மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் - அரசுக்கு கோரிக்கை!
கொளுத்தும் கோடை வெப்பத்தில் மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் - அரசுக்கு கோரிக்கை!
கொளுத்தும் கோடை வெப்பத்தில் மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் – அரசுக்கு கோரிக்கை!

தற்போது கோடை காலம் தொடங்கி மக்கள் அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் மேலும் ஒரு புதிய சிக்கல் வரவுள்ளது.

கோடை வெப்பம்:

தமிழக அரசு எதிர்பாராத மின்விபத்து மற்றும் தேவையற்ற மின்தடைகளை தவிர்க்கும் வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்ட மின்தடைகளை செயல்படுத்த மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழக மின்வாரியம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வியில் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் பொதுத்தேர்வு சமயங்களில் மின்தடையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழியும் – சூப்பர் நியூஸ்! வானிலை அப்டேட்!

இதனால் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின்தடை செய்யப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் வழக்கம் போல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை செய்யப்பட உள்ளது. தற்போது கோடை கால வெப்பம் அதிக அளவில் மக்களை பாதித்து வரும் நிலையில் பல மணி நேரம் மின்தடையையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. எனவே கோடை காலம் முடியும் வரை அரசு மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!