ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தாமதமாகும் திட்டம்!
ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த புதிய திட்டம் தற்போது தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்:
ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் அனைத்து நல திட்டங்கள் மற்றும் மானிய விலையிலான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவு தானிய வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் ரேஷன் கடைகளில் மூலமாக கேழ்வரகு குறிப்பிட்ட அளவில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
கொளுத்தும் கோடை வெப்பத்தில் மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் ஜூன் மாதத்திற்கு பின்னர் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.