தமிழகத்தில் குழந்தைகளை பாதிக்கும் புட்டாலம்மை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் திடீரென்று குழந்தைகளுக்கு அதிக அளவில் புட்டாலம்மை நோய் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்தான விவரங்களை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புட்டாலம்மை நோய் பாதிப்பு:
நாடு முழுவதும் தற்போது புட்டாலம்மை எனப்படும் நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 461 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு பரிந்துரை இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அப்போது புட்டாலம்மை ஏற்படுத்தும் மம்ஸ் வகை வைரஸ்கள் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த வைரஸ்களுக்கு மரணம் என்பதே இல்லை. அம்மை நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்தி வைப்பது மட்டுமே நோய் தொற்றை தடுக்க கூடிய செயலாக இருந்து வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தாமதமாகும் திட்டம்!
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் நோய் கண்காணிப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளமானது அம்மை, தட்டம்மை, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை பதிவு செய்யலாம் என்றும், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாடு முழுவதும் எடுக்க உள்ளதாகவும், சளி தொல்லை போன்ற பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் சுகாதார நிலையத்தை மக்கள் அணுகுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகுந்த சிகிச்சை முறைகளை மக்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Join Our WhatsApp Group” for Latest Updates