தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழியும் – சூப்பர் நியூஸ்! வானிலை அப்டேட்!
தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. இந்நிலையில் அடுத்த வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
வானிலை நிலவரம்:
கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட தமிழகம் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அரசு அதிகாரியாகும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க – முழு விவரம் உள்ளே!
இதனை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்வது குறித்தான எந்தவித எச்சரிக்கை அறிவிப்புகளும் குறிப்பிடப்படவில்லை.