புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமைத்தொகை திட்டத்தில் இணையலாமா? அரசு விளக்கம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களும் ரூ. 1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணையலாமா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக ஒரு கோடிக்கும் மேலான மக்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் நடைமுறை பணிகள் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளை மேற்கொண்டனர். தற்போது மகளிர் உரிமை திட்ட பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்து விட்டது.
சிலிண்டர் புக் செய்பவர்கள் கவனத்திற்கு – வந்தாச்சு அதிரடி உத்தரவு!
அதனால் மீண்டும் ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்ய அக். 18 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் புதிதாக ரேஷன் பெற்றவர்களும் இத் திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம். அவ்வபோது தகுதி உள்ளவர்கள் ரூ. 1000 உரிமை தொகைதிட்டத்தில் இணைவதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது