சிலிண்டர் புக் செய்பவர்கள் கவனத்திற்கு – வந்தாச்சு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் முன்னணி சிலிண்டர் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனிற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் நிறுவனம்
நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். அதில் அதிகப்படியான மக்கள் இண்டேன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இண்டேன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி மக்கள் சிலிண்டர் புக்கிங் செய்த 2, 3 நாட்களுக்குள் சிலிண்டரை டெலிவரி செய்ய வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் கிராமப்புற பகுதிகளில் சிலிண்டர் சப்ளைக்கு 4,5 நாட்கள் எடுத்து கொள்வதாக புகார் வந்துள்ளது. அதனால் சப்ளை செய்யும் காலக்கெடுவை குறைத்திட இந்தியன் ஆயில் நிறுவனம் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வழங்கிட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றி சிலிண்டர் வழங்கும் பணியை செய்து வருகிறது. மேலும் ஏஜென்சி ஊழியர்கள், திங்கள் முதல் சனி வரை வாரத்திற்கு 6 நாட்கள் பணியாற்றி, சிலிண்டர் சப்ளையை செய்து வருகின்றனர்.
வீட்டில் மினி பார்களை அமைக்க அதிரடி தடை – கலால்துறை ஆணையர் உத்தரவு!
ஆனால் கடைசி நேரத்தில் சிலிண்டர் புக்கிங் செய்வதால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் கிடைக்காமல் போகிறது. அதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர் சப்ளையை மேற்கொள்ள வேண்டும் என ஐஓசிஎல் நிர்வாகம் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணியை காஸ் ஏஜென்சி ஊழியர்கள் துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.