தவறாக பண பரிவர்த்தனை செய்துவிடீர்களா – உடனே இதை பண்ணுங்க!
UPI மூலமாக தவறான பண பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பண பரிவர்த்தனை:
நாட்டின் சிறந்த பண பரிமாற்ற தளமாக யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தளம் விளங்கி வருகிறது. யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்வது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சில சமயங்களில் தவறான தொகையையோ அல்லது தவறான எண்ணிற்கோ அனுப்பிவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தவறுதலாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது அந்த பணத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம்.
NO போனஸ், NO சம்பள உயர்வு – ஊழியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
முதலில், பரிவர்த்தனை நடைபெற்றவுடன் அந்த வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இதன் பின்னர், அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்குள் தவறாக செலுத்திய பணம் உங்களுக்கு வந்துவிடும். ஒரு வேளை பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ.) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். மேலும், புகாரளிக்கும் போது கட்டாயமாக பரிவர்த்தனைக்கான ஆதாரத்தினை வழங்க வேண்டும். இவ்வாறு, புகாரளித்தால் கட்டாயமாக ஓரிரு நாட்களில் பணம் திரும்ப பெறப்பட்டு விடும்.