தமிழகத்தில் முட்டை உற்பத்தி மூலம் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!
தமிழகத்தில் முட்டை ஏற்றுமதியில் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் இருக்கிறது. முட்டை மூலம் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
வேலைவாய்ப்பு
உலக முட்டை தினம் அக். 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முட்டையின் சத்துக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுவதுவதே இந்த நாளின் நோக்கமாகும். இந்நிலையில் கோழி முட்டை ஏற்றுமதியில் இந்தியாவிலேயே நாமக்கல் மாவட்டம் முதலித்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக 1100க்கு மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் இருக்கின்றன.
NO போனஸ், NO சம்பள உயர்வு – ஊழியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
இந்த கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. கோழி பண்ணைகளில் உள்ள வேலைகளை நம்பி சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.