இராணுவ உதவியாளர் தேர்வுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!
கொரோன ஊரடங்கு:
இந்திய இராணுவத்தில் சிப்பாய் கிரேடு பிரிவில் தொழில்நுட்பம், கால்நடை பரமரிப்பு, நர்சிங் உதவியாளர், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், வர்த்தகர் போன்ற பணி இடங்களுக்கான ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பங்கள் கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் மார்ச் 2020 வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தேர்வு அப்போது நடக்கவில்லை.
கிராம வங்கி எழுத்தர், அதிகாரி பணியிட தேர்வு தேதி மாற்றம் – எம்.பி கோரிக்கை!!
முதல் கட்ட தேர்வு:
2019-2020ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் தினமும் 500 பேர் என்ற விகிதத்தில் உடற்தகுதி தேர்வுகள் வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு என 10 மாவட்டங்களை சேர்ந்த முன்னரே விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஆட்சியரின் எச்சரிக்கை:
திருவண்ணாமலையில் நடக்க இருக்கும் முதல் கட்ட தேர்வில் கலந்து கொள்ள 25 ஆயிரம் பேருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. இதில், 80% பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. பணியில் சேருவதற்கு யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இடைத்தரகர்கள் யாராவது அணுகினால் அவர்கள் குறித்த தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்