தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தற்போது அமலில் உள்ளன.ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இறுதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. வார இறுதி நாளான ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் அரசு மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் படி முழு ஊரடங்கு நேரத்தில் மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 6 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு !!
வேளாண்மை உற்பத்திக்கு தேவையான கடைகள் நண்பகல் 12 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் வணிகம், உணவு பொருள் கொண்டு செல்லும் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய அறிவிப்பாக நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Bc
🚲 oorukku pogalama