தமிழக அரசில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள வழங்குப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விவரங்களை சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சேலம் மாவட்ட சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் |
பணியின் பெயர் | வழக்குப் பணியாளர் |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வயது வரம்பு:
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தர்களின் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
வழக்குப் பணியாளர் கல்வி தகுதி:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BSW / MSW (Counselling Psychology) இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து, இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.