தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை!!
தற்போது தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் பள்ளிக்கல்வி செயலர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை மனு:
சென்னையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் இன்று (பிப்.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தொடக்க கல்வித்துறையில் 2004 ஆம் ஆண்டு முதல் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்திய பார் கவுன்சில் தேர்வில் புதிய மாற்றம் அமல்!!
பள்ளிக்கல்வித்துறை ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
இந்த வழக்கின் தீர்ப்பில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் அனுபவம், கல்வித்தகுதி அடிப்படியில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்