தமிழக மாணவர்களுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வித்துறை – அரசின் சூப்பர் ஏற்பாடு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வியை நிறுத்தி விட்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பதாக அரசு ஆய்வுகள் மூலம் கண்காணித்துள்ளது. இதனால் தற்போது இந்த மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு ஒன்றை அரசு செய்துள்ளது.
சிறப்பு முகாம்:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து அவற்றை செயல்படுத்தியும் வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது. மாணவர்களின் அனைத்து வித கல்வி சார்ந்த நடவடிக்கைகளும், தற்போது கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மூலம் அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? – குழப்பத்தில் மக்கள்!
Exams Daily Mobile App Download
இதைத்தவிர மாணவர்களுக்கு கல்வி கற்க எந்த வித தடையும் இருக்க கூடாது என்றும் பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு உயர்க்கல்வியை தொடராமல் இருப்பதாக அரசு கண்காணித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, பணப்பற்றாக்குறை, வறுமை போன்ற காரணங்களால் தமிழகத்தில் தற்போது 6,718 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி, உயர்கல்வியை தொடராமல் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடருவதற்கான வாய்ப்புகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தி தர உள்ளது. இதற்காக அக்டோபர் 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்