தமிழகத்தில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – மாணவர் சேர்க்கை பணிகள்!!
தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முயற்சி பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் 2020-2021 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இருந்த பொருளாதார நெருக்கடியினால் ஏராளமான புதிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர்.
CISCE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று அறிவிப்பு வெளியீடு!!
நடப்பு ஆண்டு:
நடப்பு கல்வி ஆண்டு வகுப்புகள் இந்த மாதத்தின் இறுதியில் முடிவடைகிறது. 2021- 2022ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் தொடங்கி விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுழற்சி முறை:
கொரோனா பரவல் சூழ்நிலையாக உள்ளதால் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக்கு வரும் பெற்றோர்களை வரவேற்று உரிய முறையில் பதில்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்