CISCE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று அறிவிப்பு வெளியீடு!!
சிபிஎஸ்சி தேர்வு வாரியம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றங்களை அறிவித்துள்ளதால், இதேபோன்று சிஐஎஸ்சிஇ வாரியத்தின் பொதுத்தேர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால் மாநில அரசுகள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தும், தள்ளிவைத்தும் வருகிறது. அதேபோல் சிபிஎஸ்சி தேர்வுகளையும் ரத்து செய்யக்கூறி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று சிபிஎஸ்சி வாரியம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
CISCE வாரியம்:
CBSE கல்வி வாரியத்தை போல் CISCE கல்வி வாரியமும் தேசிய அளவிலான கல்வி வாரியமாகும். அதனால் CISCE வாரியம் தனது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை இன்று பிற்பகல் வெளியிட உள்ளது. CISCE கல்வி வாரியத்தில் I.C.S.E மற்றும் I.S.C இரண்டையும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்வு அட்டவணை:
CISCE கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மே 4ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டிருந்தது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழலில் CISCE வாரியம் அகமதிப்பீடு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. CISCE வாரிய தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 35% மதிப்பெண்களை பெற வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்