10ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ – மாநில அரசு அறிவிப்பு!!
பஞ்சாப் மாநிலத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆல்பாஸ்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அந்தந்த மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சங்களை தாண்டி வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளார்.