தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வுகள் எப்போது ??? – அரசிற்கு வலுக்கும் கோரிக்கைகள் !!!

0
தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வுகள் எப்போது - அரசிற்கு வலுக்கும் கோரிக்கைகள் !!!
தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வுகள் எப்போது - அரசிற்கு வலுக்கும் கோரிக்கைகள் !!!

தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வுகள் எப்போது ??? – அரசிற்கு வலுக்கும் கோரிக்கைகள் !!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த தேதி விபரங்களை, விரைவாக அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளை திறப்பது எப்போது என்பதே இன்னும் தெளிவாகாத இந்நிலையில் அரசிற்கான அழுத்தமும் கோரிக்கைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு ?!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் 10 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர். மேலும் பள்ளிகளை திறக்க ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்ற போதும் பெற்றோர்களின் எதிர்பால் அவை கைவிடப்பட்டது. தற்போது தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் சார்பில் பள்ளிகள் திறக்க ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளாதால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள் எப்போது ??

இவை அனைத்தும் ஒரு புறம் அரசிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பெற்றோர்கள் மாணவர்கள் தரப்பில் இருந்து தற்போது புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அதனால், மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பாடங்களை படிப்பர் என்றும், இந்த ஆண்டு கொரோனா பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பாடங்களுக்கு பொதுத் தேர்வில் வினாத்தாள் தயாரிக்கப்படும், குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் எவை, என்ற விபரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை என்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், வழக்கம் போல் மார்ச்சில் நடக்குமா அல்லது ஜூன், ஜூலைக்கு தள்ளி போகுமா என்ற விபரமும் தெரியவில்லை என்பதனால் இதுகுறித்து, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, முன் கூட்டியே தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!