பல்கலைக்கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

0
பல்கலைக்கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பல்கலைக்கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பல்கலைக்கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரியர் தேர்வுகள் !!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தாலும் கல்வியாளர்கள், யுஜிசி போன்ற கல்வி வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

உயர்நீதிமன்றம் அதிரடி !!

இந்நிலையிலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் போன்றவை அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடைய செய்ய முடியாது என்றும், அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் பல்கலைக்கழகமானியக்குழு (UGC) தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இடைக்கால தடை !!

அதற்கு அரசு சார்பில் விதிமீறல்கள் ஏதும் இல்லை என்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணையை சிலர் சட்டவிரோதமாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டதற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நேரடி விசாரணைக்கு ஜனவரி 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!