தமிழக அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமல்? – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, அதே அளவிலான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2023 ஜனவரி 1 முதலான மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு 4% ஆக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் உயர்த்தப்பட்ட DA ஆனது ஜனவரி 1 ம் தேதி முதல் முன் தேதியிட்டு, கடந்த மாதங்களுக்கான நிலுவை தொகை வரும் மாத சம்பள தொகையுடன் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஆனால், தமிழகஅரசு 2023 ஜனவரி 1 முதல் ஜூன் 20 வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை 4% உயர்த்துவதாக அறிவித்தது. மத்திய அரசை பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படியானது ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய அறிவிப்பு நியாயமானது அல்ல என்றும், உடனடியாக ஜனவரி முதலான DA உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Exams Daily Mobile App Download